வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Thursday 30 June 2016

அஷ்ட கர்மாக்கள் விளக்கம்


அஷ்ட கர்மாக்களை என்னெவென்று பார்க்கு முன் அதனைப் பற்றிய முழுவிளக்கம் அவசியமாகின்றது, காரணம் ஒரு பயிற்சியின் அல்லது படிப்பின் அவசியமும், காரணமும், வரலாறும் தெரிந்தால் அதனை கற்றுக்கொள்ள ஆர்வமும், கற்றுக் கொண்டே தீரவேண்டும் என்கிற உத்வேகமும் நம்முள் இயல்பாக உருவாகும். இப்போது கர்மாக்களை தெரிந்துகொள்ள துவங்குவோம்.

1. ஒன்று என்பது பிரதமை என்றும்
2. இரண்டு என்பது துதியை என்றும்
3. மூன்று என்பது திரிதியை என்றும்
4. நான்கு என்பது சதுர்த்தி என்றும்
5. ஐந்து என்பது பஞ்சமி என்றும்
6. ஆறு என்பது சஷ்டி என்றும்
7. ஏழு என்பது சப்தமி என்றும்
8. எட்டு என்பது அஷ்டமி என்றும்
9. ஒன்பது என்பது நவமி என்றும்
10. பத்து என்பது தசமி என்றும்
11. பதினொன்று என்பது ஏகாதசி என்றும்
12. பனிரெண்டு என்பது துவாதசி என்றும்
13. பதிமூன்று என்பது திரயோதசி என்றும்
14. பதினான்கு என்பது சதுர்த்தசி என்றும்
15. பதினைந்து என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாகவே அமாவாசை ஆண்களையும், பௌர்ணமி பெண்களையும் அதிகம் தொடர்பு கொண்டுள்ளதாக அறிகிறோம். பௌர்ணமியில் நீர்நிலைகளில் பௌர்ணமியின் (குளுமை)ஆதிக்கம் அதிகம் இருப்பதை எல்லோரும் சாதாரணமாக காணலாம். அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மன அமைதியற்ற (இறுக்கமான) சூழல் காணப்படுவதுண்டு. ஆனால் ஒரு சில பூஜைக்குரிய துவக்கத்தினை சிலர் இந்நாளில் (அமாவாசையில்) துவக்குவதுண்டு. இந்த யோகம் தனை ஆண் பெண் என பாகுபாடின்றி யாரும் பயில முடியும், இதில் ஆணிலும் விட பெண்கள் மிக விரைவாக முன்னேற்றமும் உயர்நிலையை அடைகின்றார்கள் என்பது அனுபவ உண்மை. காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியின் வடிவமாக உள்ளதுதான். அதனால் அவர்கள் முயன்றால் போதும், அந்த உயர்நிலை அவர்களை தேடி வந்து அடைந்து விடுகிறது.

சரி கர்மாகளுக்கு வருவோம்:

இந்த கர்மாக்கள் எட்டு என்கிற எண்ணிக்கையில் இருப்பதால் இதனை அஷ்ட கர்மா (எட்டு தொழில்) என்றழைக்கிறோம். இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது. இந்த கர்மாக்களை மிகவும் சிரத்தையாகவும் உள்ளார்ந்த உத்வேகத்தோடும் பயிலுவோர் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் நிலையினை அடைகிறார்கள் என்கிறார் இறைவனார். இவ்வளவு சிறப்பினையும் ஒருங்கே பெற்ற இந்த அஷ்டமா சக்திகளின் ஒரு பகுதியான அஷ்ட கர்மாக்கள் என்பது முறையே,

1. வசியம்
2. மோகனம்
3. உச்சாடனம்
4. ஸ்தம்பனம்
5. ஆகர்ஷனம்
6. வித்துவேடனம்
7. பேதனம்
8. மாரணம் என்பது ஆகும்

இந்த அஷ்ட கர்மாக்களின் சக்தி மிகுந்த செயல்பாடுகள் என்னென்று பார்ப்போம்.

1. வசியம் என்றால், ஆகர்ஷனம், மோகனம், வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும். ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில், தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது – மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.

2. மோகனம் என்றால், மயக்குவது. தன்னிடம் மயங்கச் செய்வது, தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.

3. உச்சாடனம் என்றால், தனது மந்திர சக்தியால் தன்னுடைய நோய், கடன், பேய், பிசாசு, பூதம், எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும்.
4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை, நீரை, ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம், நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம். 

5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள், மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும், அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம். 

6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது, பகைமை உண்டாக்குவது, எது தனக்கு வேண்டாததோ அதனை, தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள், தீய பழக்கங்கள் போன்றவை )

7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது, பிரிப்பது. (நண்பர்கள், கணவன் மனைவி, தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும், மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது. மனிதர்கள், தனக்குள்ளும், வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது.

யோகங்களை கற்க வேண்டிய அவசியம் என்ன?

அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும், பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது. இவைகளால் யாருக்கு என்ன லாபம்? என்று கேட்போர் உண்டு. இதில் லாபம் இல்லாமல் இல்லை. ஆனால் இந்த லாபம் என்பது பணம் தரும் லாபமல்ல, மன அமைதி, மன விகாரம் நீக்கல், ஆழ் மன நிம்மதி போன்ற உண்மை நிலை உணர்தல் தொடர்பான லாபங்கள். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்க முடியாத உன்னத நிலை. யோசித்துப் பாருங்கள். வெற்று உடம்பாக, கையில் சல்லிக் காசின்றி, ஒரு அனாதையைபோல் பிறந்த மனிதன், ஒருநாள் ஒரு உடை என்று அணிந்து கொண்டே வந்தால் முதலில் அணிந்த உடையை மீண்டும் அணிய மூன்றாண்டாகும் என்ற நிலை கண்ட போதும், சல்லிகாசின்றி பூமிக்கு வந்த மனிதன் தனது கொள்ளுப் பேரனின் கொள்ளுப்பேரன் வரைக்கும் காசு,பணம்,சொத்து சேர்த்த நிலை கண்டபோதும், தன்னந் தனியாளாக பிறந்தவன் மகா பெரிய குடும்பஸ்தனாக மாறி வாழ்வில் பல விதத்திலும் செல்வாக்கு, சொல்வாக்கு, ஆள் அம்பு சேனை என பெரு வாழ்வு கண்டபோதும், சுத்தமாக நிம்மதியை தொலைத்தவனாக, அமைதியை ஆழக்குழியில் தானே புதைத்தவனாக, மாபெரும் குடும்பத்தில் சுற்றங்கள் புடைசூழ தான் நின்ற போதும் தனி ஆளாக, தனி மரமாக, தனிமைபடுத்தப்பட்டு நிற்பது போன்ற மன நிலைப்பாடு கொண்டவர்களை எங்கும் பார்க்கும் நிலை இன்று வந்து விட்டது.

யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்று அல்லது பலவான மனக்குறைகளும் நிவர்த்தி செய்யமுடியுமா, முடியாதா என்ற பயத்தோடும் கூடிய வாழ்வினை தன்னகத்தே கொண்டே உலா வருகின்றார்கள். என்னவென்றே குறிப்பிட முடியாத இறுக்கமான முகத்தோடு வாழவேண்டுமே என்கிற காரணத்திற்காகவெ வாழ்பவர்கள் போல இன்றைய தலைமுறையினர் வாழ்கின்றனரே இது என்ன அவலமான நிலை? வாழ்வென்பது ஆனந்த மயமானதல்லவா! அழுது வடிவதல்லவே!! கிடைததற்கறிய மனிதப் பிறவியப்பா இது என்று சொன்னால் "அய்யா என் நிலைமை உங்களுக்கில்ல, அதனால சொல்றீங்க" என்று வாழ்வை ஏதோ ஒரு வழியில் தொலைத்தவர்கள் புலம்புவதை தினமும் காண்கிறோம். இதே வாழ்வை நமது மூதாதையர் வாழ்ந்த போது இப்படி இருந்ததில்லையே, ஏன் நமது தந்தையே நம்மைப் போல இப்படி மந்திரித்த ஆடு போல இருக்கவில்லையே! நாம் மட்டும் ஏன் இப்படி ஆனோம்? ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவர்களாகவே இன்றைய மனிதர்களின் அன்றாட வாழ்வு இயந்திரத்தனமாக அமைந்துள்ளதை எல்லோரும் உணர்கிறோம்.

ஒருமனிதன், தனது வாழ்வின் அல்லது பொதுவாக மனித வாழ்வின் உண்மையான அதிசூட்சுமத்தினை உணர்ந்திருந்தால் மனம் வேண்டாத கவலையை தன்னுள் வைத்திருக்காது. யோகம் பயின்று இங்கே மறைந்து எங்கோ எழுவது போன்ற சித்து விளையாட்டு எல்லாம் வேண்டாம், ஆனால் மன நிம்மதியை, வாழ்வின் உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே போதும், அதற்கான சரியான வழி யோகம் பயில்வதுதான். ஒரு வீட்டில் ஒருவர் அல்லது இருவர் யோகம் தெரிந்திருந்தால் கூட அந்த வீட்டில் கண்டிப்பாக அமைதியும், ஆனந்தமும் நியாயமான முறையில் கிடைத்துவிடும். நியாயமற்ற வழியில் வரும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிலைப்பதில்லை, நியாயமற்ற முறையில் வருகின்ற பணமும், வைத்திய செலவுக்குத் தான் போகும். எந்த விதத்தில் பணம் போனாலும் அது ஏதாவது ஒரு வழியில் திரும்ப கிடைக்கும், ஆனால் வைத்தியசெலவு செய்த பணம் எந்நாளும் திரும்பாது அல்லவா? எல்லோரும் யோகம் பயிலத் துவங்கினால் வாழ்வில் நாம் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டோம், நமக்கும் யாரும் தீங்கெண்ணமாட்டார்கள். சரியாக விதியை நாமே வகுத்து வாழலாம். நமது சந்ததியினர் நலமும் வளமும் நிரந்தரமாக பெறுவார்கள், செழிப்படைவார்கள். அஷ்டகர்மாக்களில் ஏதேனும் ஒன்றை கை வரப் பெற்றாலே போதும். நமது வாழ்வின் நிலை மிக அருமையாக அமைந்து விடும்.

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன்:

ஒருவரின் பிறந்த ஜாதகத்தை துல்லியமாக ஆய்வதன் மூலம் அவருக்கு இப்பிறப்பில் அஷ்ட கர்மாக்கள் கைகூடி வருமா, வரும் அஷ்ட கர்மாக்களால் அவருக்கு நன்மைகள் உண்டாகுமா, உண்டாகாதா எனவும் அறியலாம். இவைகள் எல்லாம் உலக மக்களின் நன்மைக்காகவே உருவாக்கி அருளப்பட்டவை யாகும், மதங்களுக்கப்பாற்பட்டதாகும், எல்லா மதங்களும் மனிதன் தனக்காக தோற்றுவித்தவைதான். தானே எந்த மதமும் தோன்றியதில்லை, நாம் தோற்றுவித்த ஒரு மதத்திற்கு நாமே அடிமையாகும் நிலையை நாம் யோசிப்பதே இல்லையே? ஏன்?

பரந்து இருக்கும் இந்த உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் வேதம் என்பது முழு உரிமையானதாகும். இந்த வேதம், யோகம், த்யானம், தவம், மந்திரங்கள் எவற்றிற்கும் தனியான ஒரு மதம் உரிமை கொண்டாட முடியாததாகும். அது எந்த மதமாக இருந்தாலும் சரியே. வேதம் என்பதே உலக பொது மறையாகும் உலக பொதுமறை என்றால் உலகமக்கள் அனைவருக்கும் உரிமையானது என்று பொருள். எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்போம், ஆனால் சிவபெருமானையே இந்து கடவுளாகத்தான் பார்க்கின்றோம். எந்நாட்டவர்க்கும் இறைவன் இந்துக்களாகிய நமக்கு மட்டும் உரிமையானவராக எப்படி ஆக முடியும்?

நாம் மனிதர்கள் அவ்வளவுதான். அதற்கு மேல் மதம், ஜாதி என்பதெல்லாம் ஒரு மாயப் போர்வை, இதனை உணர்ந்தாலே போதும். நான் ஒன்றை உண்டு என்று சொல்வதால் ஒன்று உண்டு என்றோ, நான் ஒன்றை இல்லையென்றால் அந்த ஒன்று இல்லாமல் போவதோ இல்லை, யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்டென்பது என்றும் உண்டு. உதாரணமாக ஒரு வஸ்து (பொருள்) இருக்கின்றது என்றால் அதனை உருவாக்கியவர் ஒருவர் உண்டு தானே, அவர் எனது கண்களுக்கு எதிரே தெரியவில்லை என்பதனால் அதனை உருவாக்கியவர் இல்லை என்றாகி விடுமா?

ஒவ்வொன்றையும் உருவாக்கியரை பார்த்தால்தான் ஒப்புக்கொள்வேன் என்பது எந்த விதமான ஞானம்? மனிதன் உருவாக்கிடும் பொருள்களுக்கு முடிவு உண்டு அல்லவா, அதுபோலவே இறைவன் அல்லது (இயற்கை) உருவாக்கிய பொருட்களுக்கும், முடிவு தேதி உண்டு, ஆனால் எப்போது முடிவு என்பது தெரியாது (ரகசியம் ஒன்றுமில்லை தெரிந்தால் அதற்கு முன்னரே மனிதனுக்கு முடிவு வந்துவிடும்) அப்படி உருவாக்கிய அந்த சிருஷ்டி கர்த்தாவை நான் சிவன் என்கிறேன், மற்றவர்கள் வேறு பெயரில் அழைக்கிறார்கள் அவ்வளவுதான்.

நான் சிவன் என்றழைக்க தெரிந்து கொண்டதுபோல், அவர்கள் வேறு பெயரில் அழைக்க தெரிந்திருக்கின்றார்கள். உருவாக்கியவரை எண்ணிக் கொண்டு எப்படி அழைத்தாலும் அது அந்த உருவாக்கியவரை போய்ச் சேரும் என்பதுதானே உண்மை. நமது குழந்தைக்கு நாம் ஒரு பெயர் வைத்திருப்போம், ஆனால் நமது நண்பர் மனதில் யாரோ ஏற்படுத்திய அன்பு அலைகளின் காரணத்தினால் அவர், அவரது நண்பரின் பெயரை நமது குழந்தைக்கு சூட்டி அழைப்பார், அதில் அவருக்கு திருப்தி, சந்தோஷம். அவர் அப்படி அழைப்பதால் நமது குழந்தையின் பெயர் மாறிவிடுமா என்ன?

உலக மக்கள் அனைவருக்கும் ஒருவரே காரணமும், கதியும் ஆனவர். அந்த ஒருவர் யாராக இருந்ருந்தால் என்ன? நமக்கு தேவை, நாம் நம்மை சரணடைய செய்ய திருவடிகள் வேண்டும், அதற்கு எந்த திருநாமம் இருந்தால் என்ன? யாரோ ஏதோ சொன்னால் சொல்லட்டுமே! அவர்கள் உண்மையை உணரும் போது அவர்களுக்கே தெரியும், என்பதே சரியான பதில். ஆனால் இதே பதிலை மற்றவர்கள் நம்மைப் பார்த்து சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. ஏன்? அதற்காக நாம் ஏன் கோபம் வருத்தம் கொள்ள வேண்டும்? நாம் இதனை நம்புகிறோம் அவர்கள் அதனை நம்புகின்றார்கள், நாம் எந்த அளவுக்கு இதனை முழுமனதாக நம்புகிறோமோ, அப்படித்தான் மற்றவர்களும் அதனை நம்புகிறார்கள் அவ்வளவுதான்.

இந்த நியாயமான, உண்மையான, சத்யமான, வாழ்வின் பேருண்மையை தெளிவாக உணர மனிதர்கள் யோகம் பயில்வது அவசிய தேவையாகின்றது. யோகப்பயிற்சி நம்மை சேதப்படுத்தாமல் நம்முள் ஒளி ஏற்றும், அற்புத உயர்நிலையை நம்முள் ஏற்படுத்தி நமக்கு என்றும் துணை நிற்கும்.

யோகம் பயில்வோம், யோகமாக வாழ்வோம்.
வாழுங்கள் வளமோடு, வாழும் நாளெல்லாம்.

இந்த அஷ்ட கர்மாவுக்கும் உரிய மூலிகைகள் என்னவென்று அகஸ்தியர் கூறுவதை பின்னர் பார்ப்போம்.

Tuesday 28 June 2016

அஷ்டமாசக்திகள் ஓர் அறிமுகம்


அஷ்டமாசக்திகளை பெரும் மூலிகையும் மந்திரமும் என்னவென்று அறியும் முன் நாம் யோகம் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது, ஆகவே இந்த பதிவினில் யோகம் பற்றிய முக்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம். யோகமும், மூலிகையும், மந்த்ரமும் என்னவென்று பார்ப்போம்.

முதலில் யோகம்:

மனித வாழ்வினில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நன்மைகள் பெருகி வருவதை நாம் யோகம் என்கிறோம், காரணம், நமது எண்ணங்களுக்கும், செயல்பாட்டிற்கும் மேல் அதிகமாக நன்மைகள் கிடைப்பதால் அதனை நாம் யோகம் என்று சிறப்பித்து கூறுகிறோம். ஆனால் இப்போது நாம் சொல்ல இருக்கும் இந்த யோகம் என்பது, மண்ணில் மண்ணாக மறையப்போகும் இந்த மனித உடல், ஒரு பெரிய சாதனையை செய்து, இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ள, வாழ்வதற்கு வர இருக்கின்ற, மனித உயிர்கள் தன்நிலையில் இருந்து உய்யும் பொருட்டு மகரிஷிகளாலும், யோகிகளாலும், சித்தர் பெருமக்களாலும் நமக்கு அருளப்பட்டதாகும்.

இந்த யோகம் எதிர்பாராமல் வருவதல்ல, எதிர்பாராமல் வரும் யோகமானது, நமது வாழ்நாளில் வரலாம், வராமலும் போகலாம். ஆனால் இந்த யோகத்தினை பயிற்சியின் வாயிலாக நமக்கு நாமே பெற்றுக் கொள்ளலாம். அதுதான் இந்த யோகத்தின் தனித்தன்மையும் பெருமையுமாகும். இதனால் வருகின்ற யோகமானது, எப்பிறப்பிலும் நமது துணையாவதாகும். இந்த பயிற்சியினை வாசி யோகம் என்றும், ப்ராணாயாமம் என்றும், மூச்சு பயிற்சி என்றும் கூறுவார்கள். ஆனால் மனிதனை தெய்வ நிலை காணச் செய்வதால் இந்த பயிற்சியினை தெய்வநிலை யோகப் பயிற்சி என்பதே சரியாகும். இந்த யோகத்திற்கான பயிற்சிக்கு நேரம் காலமும், உணவு முறையும் மிகவும் முக்யமானதாகும். இந்த யோகப்பயிற்சியை முறைப்படுத்தி பூலோக வாசிகளுக்கு அருட்கொடையாக அருளியவர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் ஆவார்கள்.

சாட்சாத் எம்பெருமான் ஆனவர் ஸ்ரீ ஸ்ரீ பார்வதி தேவிக்கு யோகத்தின் அதி சூட்சுமத்தை மனமுவந்து அருளி, தேவியானவர் அதனை பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கு அருள்பாலித்து, அதன்பின்னர் அவர்கள் இதற்கு வடிவம் தந்து, பின் அவர்களிடமிருந்து பணிந்து இதனைப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் இதற்கு உரிய பாடல்களையும், பயிற்சியையும் வகுத்து மனிதர்களின் மேன்மை கருதி உலகறிய அருள் செய்தார்கள்.

பின்னாளில் வந்த பெருமைக்குரிய யோகிகளும், சித்தர்களும் மனித ஜீவர்கள் பால் பேரன்பு கொண்டு தந்த, சிறப்பு மிக்க அந்த பயிற்சி முறையை எல்லோரும் முறையாக மேற்கொண்டால் வாழ்வில் எல்லா நலமும், வளமும் அமைதியும், ஆனந்தமும் பெறலாம். யோகப் பயிற்சிக்கு உரிய நேரம் என்னவென்று பார்ப்போம்.

24 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை ஆகின்றது,
2½ நாழிகை என்பது 1 மணி நேரம்.
நாளொன்றுக்கு 10 ஜாமம்.
5 ஜாமம் என்பது 12 மணி நேரமாகும்.
10 ஜாமம் என்பது 24 மணி நேரமாகும்

அப்படி என்றால் 24 மணியை ஜாமங்களாக பிரிக்கையில் 2 மணி 24 நிமிடங்கள் என்பது ஒரு ஜாமம் என்றாகின்றது.
முப்பது நாழிகைகளை 6 + 6 ஆக பிரித்தால் 5 ஆக பிரிக்கலாம்
பகற் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.
இராக் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இதில் பகல் முப்பது நாழிகையில், பூமியை...
6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை   (6.00-8.24) ஆகாயமும்
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48) காற்றும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை (10.48-1.12) நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை (1.12-3.36) நீரும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை  (3.36-6.00) நிலமும் ஆளுகின்றன.

இதில் இரவு முப்பது நாழிகையில், பூமியை……..
6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை  (6.00-8.24) நிலமும்
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48) நீரும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை (10.48-1.12) நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை  (1.12-3.36) காற்றும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை  (3.36-6.00) ஆகாயமும் ஆளுகின்றன.

இதில் கதிரவன் உதயத்திற்கு முன் 6 நாழிகையும் (சுமாராக காலை 3-30 மணி முதல் 6.00 மணி வரையிலும்) பின் 6 நாழிகையும் (சுமாராக காலை 6-00 மணி முதல் 8.24 மணி வரையிலும்) உள்ள காலமே யோகப் பயிற்சிக்கு உகந்ததாக ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் அருளுகின்றார். (தினசரி சூரிய உதயம் கணித்து இந்த நேரத்தை முறையாக தேர்ந்தெடுக்கலாம்).

திருமூலர் 3 ம் தந்திரம், 16 வார சரத்தில்,
திங்கள், புதன், வெள்ளியில் மூச்சை இடைநாடி வழியாகவும்,
செவ்வாய், சனி, ஞாயிறில் மூச்சை வலது நாடி வழியாகவும்,
வளர்பிறை வியாழனில் மூச்சு இடை நாடியிலும்,
தேய்பிறை வியாழனில் மூச்சு வலது நாடியிலும் பயில வேண்டும் என்கிறார்.

மேலும், காலையில் யோகம் பயில கபம் நீங்கும்,
நண்பகல் யோகம் பயில கொடிய வாத நோய்கள் தீரும்,
விடியற்காலையில் யோகம் பயில பித்த நோய்கள் அகலும் என்கிறார்.

காற்றினை உள்ளுக்கு இழுப்பது “ பூரகம்” எனப்படுகிறது,
காற்றினை வெளி விடல் “ ரேசகம் “ எனப்படுகிறது,
காற்றினை உள் நிறுத்துதல் “ கும்பகம் “ எனப்படுகிறது.

• 16 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
• 64 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
• 32 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து)
வெளியிட்டு பயிலுதல் பிராணாயாமம் எனப்படுகின்றது

இந்த முறைக்கு மாறாக வலப்பக்கம் காற்றினை உள்வாங்கி பயிலுதல் “வஞ்சனை” எனப்படும். இடைகலை வழியாக 16 மாத்திரை கால அளவு பூரகம் செய்து, பிங்கலையில் 32 மாத்திரை கால அளவு இரேசகம் செய்து மீண்டும் காற்றினை உள்வாங்காமல் 64 மாத்திரை கால அளவு வெளி கும்பகம் செய்ய பல உண்மைகள் தெரியுமாம்.

மாத்திரை கால அளவு என்பது கண் இமைப்போது அல்லது கைந் நொடிப்பொழுது எனப்படுகிறது. இந்த முறைகள் நன்கு தேர்ந்தவர்களாலேயே செய்யமுடியும். மேலும் இவைகளை எல்லாம் தேர்ந்த குருமூலமாகவே பயில வேண்டும். ஆரம்ப நிலையில் பயில்பவர்கள், இதனை,

• 6 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
• 24 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
• 12 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து)
வெளியிட்டு பயிலுதல் சாத்தியமாகின்றது என்றறிகிறோம்.

எப்படி என்றாலும் நன்றாக தேர்ந்த குருவின் துணை அவசியமாகின்றது. குருவின் துணையின்றி முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடது நாசியை எப்படி மூடி வலது நாசியில் மூச்சு விடுவது என்பதையும், கும்பகம் என்பதனை எப்படி செய்வது என்பதையும், வலது நாசியை எப்படி மூடி இடது நாசியில் மூச்சு விடுவது என்பதையும், வெளி கும்பகம் எவ்வாறு செய்வது என்பதனையும் குருவின் அருகாமையில்தான் செய்ய வேண்டும்.

ஏனென்றால் குருவின் துணையின்றி இந்த பயிற்சியில் ஈடுபட்டு தோல்வி காண்பது மட்டுமல்ல, உடல் தொந்திரவுகளும் (தொந்தி, அடிக்கடி ஏப்பம், அடிக்கடி அபானன் பிரிதல், சித்த சுவாதீனம், பார்வை குறைபாடு போன்றவைகள்) ஏற்படுவதுண்டு. 

முறையாக பயிற்சியை பயின்றால் இதனுடைய பலன்கள் சொல்லில் அடங்காதது. காரணம், மனித முயற்சியினால் செய்ய முடியாத பலவிதமான சாதனைகளையும், சாகசங்களையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம், ஆனால் பயில்வோரின் மனதில் முழுக்க முழுக்க தன்னலம் கருதாமையும், மக்கள் நலனும், உலக நன்மையை கருதும் மனோபாவமும் இருப்பது அவசியமாகும்.

அடுத்து வருவது உணவு முறைகள்:

மேலே சொல்லப்பட்ட பயிற்சிகள் செவ்வனே முடித்து பயிற்சியில் உயர்நிலை காண சைவ உணவு மிக அவசியமாகின்றது. அசைவ உணவுகள் உண்போர் பயிற்சிகளை தொடர்ந்து பயில்வதே முடியாமல் போகும். மேலும் உடல் உபாதைகளும் உருவாகும். அதனால் இதனை பயில முயல்வோர் அசைவம் உண்பதை நிறுத்தி விடுவதே சிறந்ததாகும். அப்போதுதான் சிறப்பாகவும், விரைவாகவும் பயிற்சியில் உயர்நிலை காண முடியும்.

துவரம்பருப்பு சைவ உணவல்ல என்பது மூத்தோர் கூற்றாகும், சைவம் என்பது பாசிப்பருப்பு குழம்பு, கீரைவகைகள், தேங்காய் போன்றவை என்பர். இந்த பயிற்சி துவங்குவதற்கு ஏற்ற வயது குறைந்தது 18 வயதும், அதிகபட்சம் 45 வயது எனலாம். இதற்கு மேல் வயது கொண்டவர்கள் வெறும் த்யானம் மட்டும் செய்யலாம்.

உடலும், மனமும், எண்ணமும், செயலிலும் தூய்மையாக இருப்பது மிக அவசியம்.

இந்த பயிற்சியின் மூலமாக வெளிப்படுவதே அஷ்ட கர்மாக்களும் அதன் பலன்களும். அதை பின்னர் பாப்போம்...

வேதங்கள் கூறும் உண்மைகள்



வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயமே

என்றார்கள் மேலோர்.

வேதங்கள் நான்கினையும் உள் ஆய்ந்து பார்க்கையில் அதிலே மெய்ப்பொருளாக காணப்படுவதும், வேதம் முழுமைக்கும் காரணமாக இருப்பதுவும் கால தேவனாகிய சிவபெருமானின் பஞ்சாட்சரமே என்கிறார்கள் மேலோர்.

அப்படி என்றால் வேதம் என்பதே முழுக்க முழுக்க மந்திரமானது எனப் பொருளாகின்றது. ரிக் வேதம் காலத்தால் மிகவும் முன்னதானது, தொடர்ந்து யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகியவை சேர நான்கும் வேதங்களானது, இதனை நான்மறை என்பர்.

முழுக்க முழுக்க தேவநாகரி மற்றும் சமஸ்க்ருத மொழியால் உருவானவை நான்கு வேதங்களாகும், இன்றைக்கும் ஒருசில நாடி ஜோதிட நூல்கள் தேவநாகரி மற்றும் க்ரந்த எழுத்துக்களால் அமைந்திருப்பதை காணலாம். உயிர் சொல்லின் உருவாக்கமாகவே அனைத்து மந்த்ரங்களும் அமைந்திருக் கின்றது.

ஐம்பூத அசைவினை வகைப்படுத்தியும், வசப்படுத்தியும் தரவல்லதாக உள்ள எழுத்துக்களின் தொகுப்பாக மந்திரங்கள் உருவாகி இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அணுவிலும் இலகுவில் கலந்து கொள்ளக் கூடியதாக மந்திர சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளதை உணர முடிகின்றது. பல்லாயிரம் கோடி எழுத்துக்களை உலகுக்கு அருளிய மேலோர்கள், அதனை செயலாக்கம் தரும் வண்ணம் வகைப்படுத்தினார்கள், அவையே நான்கு வேதங்களாக பரிணமிக்கின்றன.

நான்கு வேதங்களும், இறைவனை போற்றிப் புகழும் பொருள் தருபவையாக அமைந்துள்ளதாக தோன்றிய போதிலும், அவை பூமியின் சுற்றுச்சூழலையே மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி கொண்டவையாக அமைந்து இருக்கின்றன. உதாரணமாக, போபால் விஷவாயு கசிவின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பம் மட்டும் தப்பித்ததை சொல்லலாம். அந்த வீட்டில் ஏதோ ஹோமம் நடந்ததால் அவர்களை அந்த விஷவாயு சிறிதேனும் கூட தாக்கவில்லை.

இதுபோல் இன்னும் எத்தனையோ இருக்கலாம் ஆனால் நமக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மந்திர சொற்றொடருக்கும், ஒவ்வொரு கிரஹம் முழு காரணியாகின்றது. ஒவ்வொரு க்ரஹத்திற்கும் ஒவ்வொரு தாவரம் இசைவாகின்றது அதாவது கட்டுப்படுகின்றது. தாவரங்களைப் போலவே அதனுடைய விதைகள், கொடிகள், கிளைகள், தண்டுகள், இலைகள், வேர்கள் என அனைத்தும் அதற்குரிய க்ரஹத்திற்கு முழுமையாக கட்டுப்படுகின்றது.

இதனை வெகுகால ஆய்விற்கு பின் கண்டறிந்த மேலோர்கள், நான்கு வேதங்களுக்கும் அதனை வகை பிரித்து அளித்துள்ளார்கள்.

இதன் வாயிலாகவே அவர்கள் இந்த அதி சூட்சுமத்தை உள் நிறுத்தி அஷ்டமா சக்திகளை இரண்டாக வகை பிரித்தார்கள்.

அவை, மோகனம், பேதனம், வசீகரம், வித்துவேஷணம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம் போன்றவை அஷ்டமா கர்மாவாகவும்,

அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் போன்றவை அஷ்டமா சித்தியாகவும் பிரித்தளித்தனர்.

இந்த அஷ்டமாசக்திகளில், அஷ்டகர்மாக்களைப் பெற மந்திரங்கள், தாவரங்கள் மூலமாகவும், அஷ்டசித்தியைப் பெற மந்திரங்கள், யோக நிலைப்பயிற்சி களினாலும் பெற முடியும் என்று கண்டுணர்ந்தார்கள். அவர்கள் கண்டு வென்றதையே உலகிற்களித்தார்கள்.

முதல் மூன்று வேதங்களினின்றும் முற்றிலுமாக மாறுபட்டது அதர்வண வேதமாகும். முதல் மூன்று வேதங்களையும் மிக ஆழமாக உள்ளார்ந்த ஜீவனாக உணர்ந்து பயிலும் போது மாணாக்கனின் மன நிலையில் பலவிதமான சோதனைகளும், துன்பங்களும் தொடர்கதையாக வந்து வாட்டும், அவ்வாறான வேளையில் மாணாக்கன் மனம் தளர்ந்து விடாமல், ஒரே பிடியாக வேதப் பயில்வினை தொடர்ந்து பற்றிக் கொள்ளும் மனோபலம் பெற மாணாக்கனின் மன வலிமையை கூட்டும் பொருட்டு உருவாக்கப்பட்டதே அதர்வண வேதமாகும்.

அதர்வண வேதம் முற்றிலுமாக தீயவற்றை அழிப்பதே ஆகும். அதாவது . . மாணவனின் பயிற்சியில் மன சஞ்சலப்படாமல் இருக்கும் பொருட்டு பேதனமும், வித்துவேஷணமும், அவனுக்கு அவன் விரும்பும் மந்திரங்களும் அதன் தேவதைகளும் வசமாகும் பொருட்டு வசீகரமும், மோகனமும், மாணவனின் பயிற்சியின் இடையில் மாணவனுக்கு காற்று, மழை போன்ற இயற்கையின் தாக்குதல்களை நிறுத்தும் வகையில் ஆகர்ஷணமும், ஸ்தம்பனமும், மிருகம், விஷ ஜந்துக்களிடமிருந்து காக்கும் பொருட்டு உச்சாடனமும் , மாரணமும் அருளப்பட்டதுவாம்.

ஏன் இரண்டு, ஒன்றே போதாதா என ஒரு வினா எழுகிறதல்லவா?

எதிர்ப்பின் தன்மையை பொறுத்து இவைகள் மாறுபடுகின்றன. பேதனத்திற்கு வித்துவேஷணமும், வசீகரத்திற்கு மோகனமும், ஆகர்ஷணதிற்கு ஸ்தம்பனமும், உச்சாடனத்திற்கு மாரணமும் ஒன்றிற்கொன்று வலிதாம்.

இதனை இடம் பொருள் ஏவல் என்பர் , அதாவது தனது பயிற்சிக்கு தடையாக வரும் சக்தியை அதற்கேற்ற வகையில் தடுத்து தனது பயிற்சியை தொடர்தல் .
இந்த அஷ்டமாசக்திகளை முறையாக பயிலாத சில துன்மார்க்க மாணவர்கள் பின்னாளில் மந்திரவாதிகள் என உலாவருகின்றார்கள், இவர்கள் பணம், பொருள் மீது தாம் கொண்ட தீராத அவாவினால் மேலே சொல்லப்பட்ட சித்திகளை தவறாக பயன் படுத்துகின்றார்கள், தன்னை நாடி வருபவர்களுக்கு ஏற்றாற் போல் நண்பன், மனைவி, எதிர்ப்பாளர்கள் போன்றவர்களை பிரித்து விடவும், மயக்கவும், அடக்கவும், அழிக்கவும் பயன் படுத்துகின்றார்கள் .

இதனை தற்போது மாந்திரீகம், ஏவல் என்கிறார்கள். இவர்களின் முறையற்ற இந்த செய்கையினால் இவர்களுக்கே பின்னாளில் கடினமான தோஷமும், சாபமும் ஏற்படும்.

இன்று உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து கோடி மந்திரங்களும் வேதத்தின் துளிகளே , இவை உலக மாந்தருக்கு நன்மையை தருவதற்காகவே உருவாக்கப் பட்டவையாகும்.

பொருளுணர்ந்து சொல்லப்படும் மந்திரங்கள், நம்மை தரம் உயர்த்தும் என்பதில் வேறு கருத்தில்லை.

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் செல்வம் பெருகுமாம்



கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர். ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.


கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர். ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.
 
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்.

கரிசாலை குடிநீர்



"ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி"


என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும். இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

வல்லாரை குடிநீர்



எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.


இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக் கால் நோய், மூலம், மூட்டுவலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

துளசி குடிநீர்



துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.


அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர் களுக்கும், வெயில் மற்றும் மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்க கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல் போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

ஆண்கள் துளசியை அளவாக பயன்படுத்துவது நல்லது. இது ஆண்மையை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது. 

ஆவாரம்பூ குடிநீர்



"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..."


என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம்பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம்பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி,சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்திவந்தால், உடலை நோயின்றி ஆரோக்கி யமாக வைத்துக் கொள்ளலாம்.

Friday 24 June 2016

என்ன கற்றுக் கொண்டோம்? என்ன கற்றுக் கொடுக்கிறோம்?



எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். 

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். 

ஒரு சமயம், 
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். 

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். 

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். 

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். 

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். 

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன். காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. 

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான். 

ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

-நல்லதையே கற்றுத் தருவோம்...

Thursday 23 June 2016

நட்சத்திரங்களும் ராசிகளும்



27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.



ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.



அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. 



அதுவே 12 இராசி மண்டலமாகும்.







அவை:


1. மேஷம்
2. ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம்
5. சிம்மம்
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்


ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



மேஷம்:



1. வைராக்கியம் (Assertiveness)

2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)


மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்



ரிஷபம்:



1. கருணை (Mercy)

2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)


ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்



மிதுனம்:



1. ஆர்வம் (Curiosity)

2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)


மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.



கடகம்:



1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )

2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)


கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.



சிம்மம்:



1. வாக்குறுதி (Commitment)

2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)


சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.



கன்னி:



1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)

2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)


கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.



துலாம்:



1. சமநிலை காத்தல் (Balance)

2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)


துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.



விருச்சிகம்:



1. கவனமாக இருத்தல்(Attention)

2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)


விருச்சகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.



தனுசு:



1. லட்சியம் (Ambition)

2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)


தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.



மகரம்:



1. கண்ணியம் (Diginity)

2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)


மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.



கும்பம்:



1. சுய அதிகாரம் (Autonomy)

2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)


கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.



மீனம்:



1. உருவாக்கும் கலை (Creativity)

2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)


மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்


Monday 6 June 2016

குகை நமசிவாயர் ஜீவசமாதி, திருவண்ணாமலை


படம்: குகை நமசிவாயர் ஜீவசமாதி, திருவண்ணாமலை.

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருப்பருப்பதம் என்னும் மல்லிகார்ஜுனத்தில் (ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம்) அவதரித்தவர் நமசிவாயர். இவரது தாய்மொழி கன்னடம். லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்தவர். இந்த மரபில் வந்தவர்கள் தீவிர சைவர்கள். ஆண், பெண் என்று இப்பிரிவில் உள்ள அனைவரும் கழுத்தில் சைவ சின்னமான லிங்கத்தை அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்கே முதல் வழிபாடு நடத்துவார்கள். இளம்வயதில் இருந்தே சிவபக்தியில் திளைத்தார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். ஒருநாள் கனவில் தோன்றிய சிவபெருமான், நமசிவாயா! தென்திசை நோக்கிப் புறப்பட்டு என்னிடம் வா! என்று கட்டளையிட்டார். தன் சீடர்கள் முந்நூறு பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் ஈசன் தன் திருவிளையாடலைத் தொடங்கினார்.

தமிழ்தந்த அகத்தியர்



திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் அகத்தியம் என்னும் பிரிவில் திருமூலர் விளக்குகிறார்.


நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து

கெடுகின்ற தெம்பெருமான் என்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னி ரென்றானே.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

- திருமந்திரம்.-

இவ்வுலக மக்கள் ஆன்ம யோக வழிகளை மறந்து கெடுகிறர்கள். அகத்தியா நீ போய் அவர்களை தெளிவுபடுத்தி நல்வழி காட்டு என்று ஈசன் அகத்தியருக்குச் சொல்கிறார்.