வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Saturday 6 May 2017

பட்டினத்தாரையே விமர்சித்த உலகம் இது


விமர்சிக்கும் உலகம் இது பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது
தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி
அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது.

அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார். அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார்.

ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார்.

மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை
பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார்.

அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார்.

அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு
வெட்டு வெட்டினாள்.

பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

நீதி: எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

நற்றுணையவது நமசிவாயவே.

வினைப்பதிவின் கருவி - மகரிஷி


எண்ணம் நின்று விட்டால் நலமாக இருக்கும் என்று இயற்கைக்குப் பொருந்தா நினைவு கொள்ளவேண்டாம். உயிர் வாழும்போது, விழித்திருக்கும்போது, எண்ணங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். தூங்கும்போது எண்ணங்களில்லையே, அதனால் என்ன பயன் பெற்று வருகிறீர்கள். மரணத்தில் எண்ணம் அடியோடு நின்றுவிடும். பிறகு என்ன உயர்வைக் காணமுடியும். எண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே முறைப்படுத்திப் பயன் கண்டு சிறப்படையுங்கள். தவத்தில் பழக்கும் எண்ணம் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் சிறப்பளிக்கும்.

வாழ்த்துக் கூறுவதைப் பற்றிச் சில அன்பர்கள் வினா எழுப்புகிறார்கள். வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு ஒருவர் எனக்குத் தீங்கு இழைக்கிறார், துன்பம் தருகிறார் என்றால் அவரை எப்படி வாழ்த்த முடியும்? ஏன் அத்தகைய கொடுமையாளரை வாழ்த்த வேண்டும்? என வினவுகின்றனர். எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும் அவர் விருப்பம்போல் செய்துவிட முடியாது. ஒவ்வொருவரிடத்தும் வினைப்பயன் பதிவுகள் உள்ளன.

அப்பதிவுகளை வெளியாக்கித் தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி. தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்குத் துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் செய்யப்படலாம். பெரும்பாலும் இயற்கை வேற்று மனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக்கொண்டு வருகிறது.

ஒருவர் இன்னொருவருக்குத் தீமை செய்கிறார், அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்கை ஒருவர் வினைப்பதிவை வெளிக் கொணர இன்னொருவரைக் கருவியாக உபயோகிக்கின்றது என்றுதான் பொருள். எனவே, தீமை செய்தவர் தானே விரும்பி இன்னொருவருக்குத் துன்பம் அளித்தார் என்று கொள்வதைவிட துன்பம் கண்டவர் வினைப்பதிவை இன்னொருவர் இயற்கையின் ஒருங்கிணைந்த பேராற்றல் உந்துதலால் வெளிக்கொணர்ந்து நேர்செய்து விட்டார் என்று கொள்வதே சரியான விளக்கம்.

தனது விணைப்பதிவே இன்னொருவர் மூலமாகத் துன்பமாக விளைந்தது என்று உணர்ந்து கொண்டால் பிறர் மீது வெறுப்பு எவ்வாறு எழும்?

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும்


தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும், பின் ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனிப்பது சாத்தியமாகும். தூங்கப் போகும் போது கூட கவனி. தூக்கம் உன்னை ஆட் கொள்ளும் கடைசி விநாடி வரை கவனமாகப் பார்.

இருள் அடர்ந்து கொண்டே போகும், உடல் தளர்வடையும், நீ விழிப்பிலிருந்து தூக்கத்தினுள் விழும் ஒரு கட்டம் வரும் – அந்த கணம் வரை பார். பின் காலையில் முதல் விஷயமாக, தூக்கத்திலிருந்து எழுந்து விட்டோம் என நீ உணர்ந்த கணமே கவனிக்க ஆரம்பித்து விடு. பின் விரைவிலேயே தூக்கத்தில் நீ இருக்கும் போது கூட கவனிக்க ஆரம்பித்து விடுவாய்.

கவனித்துப் பாரத்துக் கொண்டிருப்பது என்பது இரவும் பகலும் உன்னுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீபமாகட்டும். இதுதான் உண்மையான ஆணித்தரமான தியானமாகும். மற்ற எல்லாமே தியானம் என்ற பெயரில், நீ ஏதோ ஆன்மீக சம்பந்தமானது செய்து கொண்டிருக்கிறாய் என உன்னை ஏமாற்றும், நீ விளையாட கொடுக்கப்பட்ட ஒரு பொம்மைதான்.

இந்த உண்மையான தியானத்தில் நீ தவிர்க்க இயலாததையும் தாண்டி வந்து விடுவாய். பொய்யான யாவும் காணாமல் போய்விடும்.

ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள யாவும் பொய்யானது அல்ல. எது பொய்யானது இல்லையோ அது தவிர்க்க இயலாதது. தவிர்க்க இயலாததை நீ என்ன செய்யப் போகிறாய். நீ அதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய். அந்த தவிர்க்க இயலாதது தான் தியானம்.

தவிர்க்க முடியாததை பார்த்துக் கொண்டே இருந்தாயானால் பொய்யானது தானாகவே கரைந்து போய் விடுவதை தெளிவாக காண்பாய். உனது பொய்யான கனவுகளின், ஆசை மேகத்தின் பின்னால் மறைந்து இருந்த உண்மையான விஷயம் இப்போது தெளிவாக, மேலும் அதிக தெளிவுடன் உன் முன் நிற்பதை காண்பாய்.

எல்லாவற்றிற்கும் காத்திரு, காத்திருக்கப் பழகு


சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'.

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.


பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேறும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு
நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த  கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு
பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை
ஒட்டப்பந்தையம் அல்ல

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால்
வாழப் பழகுவாய்.
இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.
எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.
வாழக வளமுடன் வாழ்க வையகம்.

ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட சாந்தி தரும் ஒரு வார்த்தை மேல்


உங்கள் சாத்திரங்கள் முழுக்க வெறும் வார்த்தைகள் தான்

வார்த்தைகள் கொள்கைகள் சிந்தனை முறைகள்

உங்கள் மனதைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன.

மனித மனம் ஞானத்தை விட அறிவில் நாட்டம் அதிகம் கொண்டு இருக்கிறது.

கடவுள் அழகு சத்தியம் இவற்றை அனுபவிக்காமல் தெரிந்து கொள்வதில் அதிகம் நாட்டம் கொண்டு உள்ளன.

அன்பு உனக்குள்ளேயே இருப்பது.

எதற்கு அதைப் பற்றி தெரிந்து கொள்வது.

அதை பெருக்கெடுத்து ஓட விடு.

மனிதன் வார்த்தைகளைப் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கிறான்

அவைகள் உள்ளீடற்ற எந்தப் பொருளும் இல்லாத வார்த்தைகள்

ஆனால் படிப்பு அறியாமையை நீக்குவதில்லை

ஒளியைப் பற்றி தெரிந்து இருந்தாலே
இருட்டு விலகி விடாது

இருட்டை விரட்டி அடிக்க ஒரு சின்ன மெழுகு வர்த்தியே போதும்

உங்களுடைய மனதை நிறைத்து வைத்திருப்பவை வெறும் வெற்று வார்த்தைகள் தான்

வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு கடவுளை எனக்குத் தெரியும் என்று நினைப்பதில் அர்த்தம் இல்லை.

கடவுளை புரிந்து கொண்டு கடவுள் என்ற வார்த்தையை சொல்லும்போது பிரகாசமான ஒளி நிறைந்து இருக்கும்

நீங்கள் வெற்று வார்த்தைகளில் இருந்து விடுபடும் வரை உங்கள் தேடுதலால் பயனில்லை.

எந்த வார்த்தை பிரகாசமானது எது சாந்தி தரும் வார்த்தை.

அது எப்போதும் வெளியே இருந்து வருவதல்ல.

நீ ஆழமாக உள்ளே போகும் போதுதான் அதைக் கேட்க முடியும்

நீ தியானத்தில் இருக்கும்போது தான் அதைக் கேட்க முடியும்.

நீ ஆழ்ந்த மௌனத்தில் இருக்கும் போதுதான் அதைக் கேட்க முடியும்

நீ ஏகாந்தத்தில் இருக்கும் போதுதான் அதைக் கேட்க முடியும்.

- ஓஷோ.

மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி


மனத்தின் இந்த அலை இயக்கம், எப்பொழுதும், தூக்க நேரம் போக மற்ற நேரங்களிலிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது.

பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் அதன் இயக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதை நிறுத்திவிட வேண்டும் என்று= சிலர் நினைத்தால் அது அறியாமைதான்.

முதலாவது மனத்தினுடைய தத்துவம் அறியாததனால் தான் அதை  நிறுத்திவிட வேண்டும் நினைக்கிறார்கள்.

மனத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைப்பதை விட அதை நல்ல முறையிலே பழக்கிவிட வேண்டும் என்று நினைக்கலாம்.

உதாரணமாக, மனம் அமைதியாக இருக்க வேண்டும், மனம் நிலைத்து இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அது நல்லது. நிறுத்திவிட வேண்டும் என்பது வேறு, நிலைத்து இருக்க வேண்டும் என்பது வேறு.


"அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கின் அசேதனம் என்று இட்டு
அஞ்சும் அடக்கா அவறிந் தேனே"


மனம் துரியத்தில் செயல்படும் போது “நிலைபேற்றுநிலை” என்றும்,

துரியாதீதத்தில் வருகிறபோது “நிறைபேற்றுநிலை” என்றும் சொல்கிறோம்.

துரியாதீதத்தில் மனம் நிறைநிலை அடையும்.

அந்த நிலையே தவத்தில் கடைசியாக அடைய வேண்டியது.

நாம் அவ்வாறு தவத்தில் பழகி மனதைச் சாதாரணப் பொருளிலிருந்து உயிருக்கு கொண்டு வந்து, உயிரிலிருந்து பரத்துக்கு கொண்டு வந்து எல்லாமாக  மாற்றி எந்த நிலையிலேயும் நிலைத்து நிற்கப் பழகவேண்டும்.

அது தான் தவம், யோகம் என்பதும் அதுவே.


- வேதாத்திரி மகரிஷி.

மனமும் வாழ்கையும் - ஓஷோ


மனம் என்பது பொறுமையில்லாதது.

ஆனால் வாழ்க்கை பொறுமையானது.

மனம் என்பது பொறுமையில்லாதது.

ஆனால் இந்த இயற்கை பொறுமையானது.

மனம் என்பது தற்காலிகமானது.

வாழ்க்கை என்பது முடிவில்லாதது.

மனதிற்கு, எதிர்பார்க்க, ஆசைப்பட, உணர, சாதிக்க என்ற வரையறைகள் உண்டு.

ஆனால் வாழ்க்கைக்கு வரையறைகள் இல்லை.

அது போய்க்கொண்டே இருக்கும்.

அது முடிவில்லாத செயல்முறை.

எதிர்காலத்தில் நமது ஆசைகள் சில பூர்த்தியாக வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகள் நம்மிடம் இருப்பதால் நமது மனம் தொடர்ந்து அதிருப்தியில் உள்ளது.

வாழ்க்கையின் எல்லையற்ற நிலையை, அதன் எல்லைகளற்ற செயல்முறையை பார்க்கின்ற ஒருவர் திருப்தியுடன் இருப்பார்.

அது ஒரு பாதுகாப்பான எண்ணம் இல்லை.

இது ஞானம்.

- ஓஷோ.

யார் இந்த கடவுள்? அவர் எப்படி இருப்பார்?


ஒவ்வொரு சமுதாயமும்,

சமூகமும்,நாகரிகமும்,தனக்கென சொந்தமான கடவுளைக் கண்டுபிடித்துக் கொள்கிறது.

"கடவுள் தனது சொந்த உருவத்தில் மனிதனைப் படைத்தான்,"

என்று அவர்கள் கூறுகின்றனர்.

அது முற்றிலும் தவறானது.

மனிதன்தான் தனது சொந்த உருவத்தில் கடவுளைப் படைத்திருக்கிறான்.

மேலும் இந்த உலகில் அநேக விதமான மக்கள் இருப்பதால்,

கடவுளின் அநேக விதமான உருவங்களும் உள்ளன.

கடவுள் என்பது ஓர் ஆள் அல்ல.

ஆனால் அது ஒருவிதமான இருப்புநிலை மட்டுமேயாகும்.

இந்த உலகத்தை படைத்த ஏதாவது ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை நான் காணவில்லை.

இந்த இயற்கையில் இறைத்தன்மையின் குணத்தை நான் நிச்சியமாக அனுபவிக்கிறேன்.

ஆனால் அது ஒரு குணத்தன்மை தானே தவிர அது ஓர் ஆள் அல்ல.

இது உனது மனதைக் காயப்படுத்தும்.

ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

உள்ள உண்மையை உள்ளபடி நான் கூறியாக வேண்டும்.

கடவுள் என்பது ஓர் ஆள் அல்ல,ஆனால் அது ஒரு விதமான இருப்புநிலை மட்டுமேயாகும்.

நான் இருப்புநிலை என்று கூறும்போது மிகவும் கவனமுடன் இரு,

ஏனெனில் நீ உனது கட்டுத்திட்டத்திற்கு ( Mind conditioning)

ஏற்றார் போல கேட்டுக்கொண்டே போகலாம்.

பொருள் போன்ற ஏதோ ஒன்று இருப்பு நிலையில் உள்ளதாக கூட உன்னால் செய்ய முடியும்.

அப்படி செய்தால் நீ மீண்டும் அதே பொறியில் சிக்கிக் கொள்வாய்.

உனது உயிர் உணர்வின் உள் மையத்தில் கடவுள் ஓர் இருப்பு நிலையில் இருக்கிறார்.

அது உனது சொந்த இருப்பு நிலைதான்.அது நீ யாரோ ஒருவரை சந்திப்பது போன்றது அல்ல.

எனவே நான் கடவுள் இல்லை என்று நான் கூறும்போது இதை நினைவில் வைத்துக்கொள்.

அதாவது நான் உண்மையிலேயே இந்த இயற்கையானது அதனளவில் போதுமானதாக இருக்கிறது என்றுதான் அர்த்தம் கொள்கிறேன்.

அதற்கு படைத்தவன் தேவையில்லை.படைப்பு இருக்கிறது

ஆனால் படைத்தவன் இல்லை.

படைப்பிற்கும் படைத்தவனுக்கும் இடையே உள்ள பிரிவினை நீக்கப்பட வேண்டும்.

அதன் பிறகு மட்டுமே தியானத்தின் சிகரங்களுக்கு உன்னால் எழுந்து செல்ல முடியும்.

அப்படி இல்லை எனில் நீ கடந்த காலத்தின் குழந்தைத்தனமான வகைகளில் மாட்டிக் கொண்டு அப்படியே இருப்பாய்.

கோயில்களில் தேவாலயங்களில்,யூத மத கோயிலுக்குள் உருவங்களுக்கு முன்னால் மண்டியிட்டுக் கொண்டு எல்லாவிதமான முட்டாள்தனமான விஷயங்களையும் செய்து கொண்டு இருப்பாய்.

மேலும் அந்த முட்டாள்தனமான விஷயங்கள் ஆயிரக்கணக்கான மற்றவர்களாலும் செய்யப்படுவதால்,

அவை முட்டாள்தனமானவை என்பதை உன்னால் ஒருபோதும் உணர்ந்து கொள்ள முடியாது.

- ஓஷோ.

ஓஷோவின் துறவு விதிகள்


1.  விழிப்புணர்வு நுட்பான உணர்தலைக் கொண்டு வருகிறது, ஆகவே அது துவக்கத்தில் அதிக வலியையும், இறுதியில் பரவசத்தையும் கொடுக்கிறது.

2. சோம்பேறித்தனம் சக்தியற்ற நிலை, செயல் குறிக்கோள் உடையது. வெறும் சக்தியாக இருந்து கொண்டிருப்பது முயற்சியற்ற செயலைக் கொண்டுவருகிறது.

3. பதட்டம் தப்பிக்கும் ஆசையை கொடுக்கிறது, இதுதான் மூழ்கடிக்கிறது, பின் இதிலிருந்து ஈகோ பிறக்கிறது.

4. தன்ணுணர்வின் நிழலாகவே உன் தனிப்பட்ட உலகம் இருக்கிறது. இதைக் கண்டுகொள், துறக்க வேண்டிய அவசியமில்லை.

5. உள்முகமாகத் திரும்புவது தப்பித்தல் அல்ல. அது அமைதியாக வாழ்வது.

6. உள்ளே – வெளியே என்றும், ஆன்மா – பொருள் என்றும் இல்லை.

7. வாழ்வு பிரிக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது.

8. அன்பு அடுத்தவருக்கு சுதந்திரம் தரும். அன்பு பொறுப்பைக் கொடுக்கும்.

9. தன்ணுணர்வோடு வாழ்வை அனுபவிப்பதே ஓஷோவின் ஒழுக்கம்.

10. குடும்பம், நண்பர்கள், மகன், மகள் போன்ற எல்லாமே வெறும் வசதிகளே, பழக்கங்களே, ஊட்டப்பட்ட நம்பிக்கைகளே.


- ஓஷோ.

தியானம் எப்படி இருக்க வேண்டும்


உங்கள் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக இருக்கிறது.
இப்பொழுது உங்கள் மனம் தியானம் செய்ய விரும்புகிறது.
இது உண்மையான தியானமல்ல, இது
பரபரப்பான தன்மைக்கு எதிரானது.

நீங்கள் பரபரப்பான தன்மையில் இருப்பதால் தியானம் கவர்ச்சிகரமாக ஆகவிட்டது.

சில நாட்கள் தியானம் செய்கிறீர்கள்
உங்கள் மனம் அமைதி அடைந்து விட்டது.

இப்பொழது மனம் அமைதியில் சலிப்படைந்து விட்டது. பரபரப்பாக ஏதாவது செய்ய விரும்புகிறது.

இது தியானத்திற்கு எதிராக மனம் எடுக்கின்ற முடிவு.

இது போன்ற எதிரும் புதிருமான துருவங்களுக்குச் செல்லும் விளையாட்டை கடந்து செல்வதே தியானம்.

சரியாக புரிந்து கொள்ளுதலே இவைகளை கடந்ததாக ஆகி விடுகிறது.

மனம் எப்பொழுதும் உங்களை எதிரானதற்கே அழைத்துச் செல்லும்

மனம் செய்யும் இந்த மாயவித்தையை மையத்தில் நின்று கவனியுங்கள்.

பரபரப்பான தன்மையை உற்று கவனியுங்கள்,  பரபரப்பை தொடர்ந்து வரும் தியான எண்ணத்தையும் உற்று கவனியுங்கள்.

இவை இரண்டும் எப்படி உறவு கொண்டுள்ளன என்பதையும் கவனியுங்கள்.

இதை நீங்கள் புரிந்து கொண்டால்  தியானம் உங்களுக்கு நிகழும்.

மனதின் நுட்பத்தை புரிந்து கொள்ளுதலே மாற்றமடையச் செய்யும்.

பிறகு உடனடியாக கடிகாரம் நின்று விடுகிறது,  காலம் மறைந்து விடுகிறது.

கடிகாரம் நின்றவுடன் மனம் நின்று விடுகிறது.

படகு வெறுமையாக இருக்கிறது.

- ஓஷோ.

நீங்கள் தூங்கும் பொழுது உங்கள் மனம் எங்கே இருக்கிறது


உங்கள் உடல் மனமற்ற நிலையில் அப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது ...

உங்கள் உடல் உண்ட உணவை ஜீரணம் செய்கிறது ...

தேவையில்லாத கழிவுகளை வெளியே தள்ளி விடுகிறது ...

இதற்கு உங்கள் மனம் தேவை இல்லை மனதின் உதவி தேவையில்லாமலே ...

உடல் தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு புத்திசாலித்தனம் உடையது ...

தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் மனம் செயல்படுவதை கவனியுங்கள் ...

நீங்கள் சாப்பிடுகிறீர்கள் அதை எப்படி ஜீரணிக்க வேண்டும் என்று உடல் மனதைக் கேட்பதில்லை ...

அந்த வேலையை உடல் மிகச் சுலபமாக செய்து கொண்டு இருக்கிறது ...

இந்த உடல் காற்றிலிருந்தும் தனக்கு தேவையான பிராணவாயுவை எடுத்துக் கொள்ளதெரிந்திருக்கிறது ...

மனம் என்ற ஒன்று இல்லாமல் இந்த மரங்கள் செடிகள் விலங்குகள் எல்லாம் மிக ஆரோக்கியமாக இருக்கின்றன ...

வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தான்தான் காரணம் என்று மனம் சொல்லிக் கொள்கிறது ...

புல் மீண்டும் தானாகவே வளருகிறது .

- ஓஷோ

கவனத்தைக் கவர விரும்பாதே


உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.

நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.

உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.

நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.

ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போதுதான் உன்னால் அடைய முடியும்.

இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.

நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?

ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?

நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.

அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள்தான்.

நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

கவன ஈர்ப்பில்தான் அகந்தை வாழ்கிறது.
அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.

நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.

இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.

ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.

அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.

நீ யாரையும் ஏமாற்றவில்லை.ஆனால், உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்.

- ஓஷோ.

தவமும் அறமும் - மகரிஷி


தவத்தையும் அறத்தையும் நீங்கள் மிகச் சுலபமாகப் பற்றிச் செல்லும் முறையினை இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

தவம் எதற்காக என்றால் இறையுணர்வு பெற்று இறைவனோடு உறைவதற்காக.

அறம் எதற்காக என்றால் இது வரையில் செய்த கர்மங்களின் அழுத்தத்தினால் எண்ணமும் செயலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே,

அதிலிருந்து செய்து செய்து நல்லனவே செய்யக்கூடிய அளவுக்கு, தீயன செய்யாது இருக்கக்கூடிய ஒரு தூய்மைக்கு வரவேண்டும்.

மனத்தூய்மை தவத்தினால் வரும்; வினைத்தூய்மை செயலினால் வரும்; நல்ல செயல் அறத்தினால் வரும்.

அதனால் இது வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே பார்ப்பதற்கு என்ன வேண்டும்? இந்தக் காலத்திற்கு வேண்டியது அதுதான்.

அந்த அறம், தவம் இவற்றை வைத்துத்தான் இதுவரையில் இந்த உலகத்திலே ஏற்பட்ட மதங்களெல்லாம் அமைந்துள்ளன.

அறிவு என்பது அறியப்படுவது.
ஞானம் என்பது உணரப்படுவது.

அறிவை ஏடுகளில் பெறலாம்.
ஞானத்தை தவத்தால் பெறலாம்.

அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்.
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர்; அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்;
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
அதை வாழ்ந்து காட்டினோரை நினைவு கூர்வோம்".

- அருட்தந்தை

வீரமா..? விவேகமா.? எது சிறந்தது?


ஒரு ஜப்பானிய சாமுராய் வீரனின் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.அதிலும் குறிப்பாக,ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.ஆகவே சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்.

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.ஆனால், எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.முடிவில் சாமுராய் தானே எலியைக் கொல்வது என முடிவு செய்து, ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.ஆனால் வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீது பாய்ந்து தாக்கியது.
அதில் அவனும் காயம் அடைந்தான்.‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா?’ என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்,
"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது.அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்’’ என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.பூனையும் உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது. பூனை இருப்பதை அறிந்த எலி,தயங்கித் தயங்கி வெளியே வந்தது.கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது.மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.ஆனால், இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள் வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது. சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,
"எப்படி முரட்டுஎலியைக் கொன்றாய்? இதில் என்ன சூட்சுமம்?’’எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.நான் பொறுமையாக காத்திருந்தேன்.நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது. ஆகவே,அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.
வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டுதான் இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு  பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.என் நகங்கள் கூட கூர்மையானவை.ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது.எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.ஆகவே ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.பலவான் தனது பேச்சிலும்,செயலிலும் அமைதியாகவே இருப்பான்.உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்.ஆனால் தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதைபொருந்தக்கூடியதே.மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.ஆனால்,அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

நம் பலம் மட்டும் நம் பலமில்லை,நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்.

ராவணனிடம் பவ்யமாக உபதேசம் கேட்டான் ராமன்


போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!

ராவணன் உபதேசித்தான்...

1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. நான், அனுமனை சிறியவன் என்னு எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.

ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!

பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.

ஜீவ சமாதி என்ன என்று தெரியுமா?


சில நாட்களாக ஜீவ சமாதி குறித்து சில சான்றோர் பெருமக்கள் முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் தங்கள் அனுபவங்கள் குறித்து high tech ஆக விருந்து படைக்கிறார்கள்.

என் நண்பன் படித்து விட்டு, இது போன்ற அனுபவங்கள் பெறுவது சிரமமோ என்று தயங்கியபடியே கேட்டான்.

நண்பனுக்கு புரியும்படி விளக்கத்தை மிகவும் ஆழமாக செல்லாமல் மேலோட்டமாக சொன்னதை இங்கு கூறுகிறேன்.

ஜீவ சமாதி என்றால் என்னவோ ஏதோ என்று குழப்பிக் கொள்ளாதே.

சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள்.

அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர் காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு. வேண்டாத எண்ணங்கள் நீங்கி, நாம் வாழ்வில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு கிட்டும்.

சுருக்கமாக, நமது குறைபாடுகளை நீக்கி நமக்கு வளமான வாழ்வை, நமதுவினை பதிவுகளுக்கேற்ப, சீரமைக்க உதவும். அவ்வளவுதான்.

அங்கே போய் தியானம் செய்து அந்த உணர்வோடு கலந்து தன்னை மறக்கவேண்டும், தளம் மாற வேண்டும் என்று ஏதேதோ புரியாத வகையில் சொல்கிறார்களே? என்று நண்பன் கேட்டான்.

தியானம் என்றால் என்னவோ ஏதோ என்று குழப்பிக் கொள்ளாதே.

ஒரு செயலை முழுமனதுடன், சிந்தனை சிதறாமல் நீ செய்தால் அதுவே தியானம்தான்.

One thing at one will என்று மகரிஷி கூறுவார்.

ஜீவசமாதியில, உனது கவனம் முழுவதும், அந்த மகானின் உயர் சிந்தனைகளோடு உனது உணர்வுகளும் கலக்க வேண்டும் என்று இருந்தால் போதும்.

பிரபஞ்ச பேராற்றலும் உன்னோடு இணைந்து உனக்கு என்ன மாற்றம் தேவையோ அது இயல்பாக நடந்து விடும்.

இவ்வளவுதானா? என்று நண்பன் கேட்டான்.

அவ்வளவுதான்.போட்டு குழப்பிக் கொள்ளாதே. எந்த சிறப்பான கோயிலுக்கு போனாலும் சித்தர் பீடம் இருக்கும். விசாரித்து அங்கே போய்,
அமைதியாக இயல்பாக உன் கவனத்தை அங்கேயே நிலை நிறுத்து. மற்றவை தானாக நடக்கும் என்றேன்.

இதை பதிவாக எளிமையாக போடுவதற்கு காரணம் எல்லோருமே விழிப்போடு இருக்கலாமே என்றுதான்.

இதையடைய நீங்கள் பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வு தளமோ தேவையில்லை.

குருவே சரணம்,,,

த்வைதம், அத்வைதம், வஷிஷ்டாத்வைதம், மகரிஷி சிந்தனை


நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்;  அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் ஒரு உணவுப் பெட்டியில் (Tiffen Box) உணவை எடுத்துச் செல்கிறீர்கள்.

இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு.  பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள்.

இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை;  உங்களுக்குள் சென்றுவிட்டது.  இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள்.

இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள்.  நீங்கள் யார்?  இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (essence) தானே?

அணு நிலையில் உடலும் ஒன்றே.  சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண்  மலர்ந்தது.  சில விண் துகள்கள் உடலாயின.  சில விண் துகள்கள் உணவாயின.

இதனால் உடலும் உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே.  இங்கு அத்வைதம் துவைதமாயிற்று.

1 மணிக்கு, நீங்கள் வேறு, அந்த உணவு வேறு.  5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள்.   1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக் கிரமம் (Process) இருக்கிறதே,  அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான்.

த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்கு சென்றடைகிறான்.

 இந்த செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத் வைதம்.  அதை தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், 'த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி' என்றும், 'அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி' என்றும், சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு.

எல்லாம் ஒன்று" என்பது அத்வைதம்.

ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று "மாறுபடுகிறது" என்பது த்வைதம்,

எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disinte-grating) அணுவாகி பின்னர் பாரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்."

- அருட்தந்தை,,,,

உலகையே வெற்று படகு போல கருத வேண்டும்


ஒருவன் படகின் மேல் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம்

ஒரு வெற்றுப்படகு அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்டகுணம்  உள்ள மனிதனாக இருந்தாலும் அவன் கோபப்படமாட்டான்.

ஆனால் அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவர் இருப்பதைப் பார்த்தால் படகை சரியாக செலுத்தும்படி கூச்சலிடுவான்.

அவன் கூச்சலிடுவது கேட்கப்படாமல் இருந்தால் அவனைத் திட்ட ஆரம்பித்து விடுவான்.

இவை ஏன் நடக்கிறது என்றால் எதிரே வந்த படகில் யாரோ ஒருவன் இருக்கிறான்.

ஆனால் அந்தப் படகு வெறுமையாய் இருந்தால் அவன் கூச்சலிடமாட்டான்.
கோபம் அடைய மாட்டான்.

எப்பொழுதெல்லாம்,யாரேனும் உங்கள் மீது கோபப்பட்டால்

அல்லது யாராவது  உங்கள் மீது மோதினால்,

நீங்கள் இதற்குப் பொறுப்பல்ல அவர்தான் என்று எண்ணுவீர்கள்.

இப்படித்தான் அறியாமை முடிவு செய்கிறது.

இப்படித்தான் அறியாமை மாற்றிக் கூறுகிறது.

அறியாமை எப்போதும் சொல்லும்,''மற்றவர்  தான் இதற்குப் பொறுப்பு காரணம்''

ஆனால் விவேகம்

''மற்றவர்கள்தான் இதற்குப் பொறுப்பு, காரணம்  என்றால் நானும் இதற்குப் பொறுப்பாவேன், காரணமாவேன்.''

மோதலைத் தவிர்ப்பதற்கு ஒரே  வழி,

'நான்' அங்கு இல்லாமல் இருப்பதுதான்.;

நான் பொறுப்பு என்று சொன்னால்

ஏதோ நீங்கள் செய்து விட்டதாகப் பொருள் அல்ல.

நீங்கள் ஏதும் செய்யாதிருக்கலாம்.

ஆனால் அங்கே நீங்கள் இருப்பது ஒன்றே போதுமானது,

அவர்கள் கோபமடைய நீங்கள் நல்லது செய்கிறீர்களா, கெட்டது  செய்கிறீர்களா என்பது கேள்வி அல்ல.

நீங்கள் அங்கு இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.

"நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச் செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றைக் கடக்கும்போது ஒருவரும் உன்னை எதிர்க்க மாட்டார்கள்.

உன்னை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்."

- ஓஷோ.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை


எல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப, அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

‘சஹஸ்ரநாமம்'  என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.

ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார்.

அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம்.

அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

“நான் இதைக் கேட்கலையே...நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?

 நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே...” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார்.

திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன...?”

‘சுவாமி!  நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு;
இதை எடுத்துண்டு போ'ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...?” என்றார் சிஷ்யர்.

அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்:

அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்...

அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர்.

இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது.

 எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான்.

ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.

ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்...?

அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...?

ஞானியருள் அக்ரகண்யரான பீஷ்மரால்..

"பீஷ்மர்" என்றாலே "பயப்படத் தக்கவர்" என்று அர்த்தம்.

அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர்.

அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

“அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ!  அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே - தர்மத்தைச் சொல்ல...?'  என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.

பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்!

இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார்.

பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான்.

அவன் சொன்னது கீதை;  கேட்பது சஹஸ்ரநாமம்.

இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு.

பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார்.

"பகவத் குண தர்ப்பணம்" என்று அதற்குப் பெயர்.

'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று பொருள்.

"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்னும்
போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா?
அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்...

அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்!

சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..?

அதைப் போலே சர்வ வியாபகனானவனை, அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.

நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது.

சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது... நம் சித்தத்திலும் நுழையாது.

"கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால், அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.

இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது.

கீதையைச் சொன்னது பகவான்.

அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம்.

பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.

வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!!

நாராயண! நாராயண!

ஆதி சங்கரர் அருளிய வைராக்ய ஸ்லோகங்கள்


ஒரு காவல்காரன். வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''ஜாக்கிரதை'' என்று கத்திக்கொண்டே போவான்....
ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்யவேண்டியதாயிற்று....
அவன் பிள்ளை முன் ஜன்மத்தில் ஒரு  #வேதமறிந்த பண்டிதனாக  இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது...இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்கிரதை சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்....அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்....
அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான். ''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ,இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ ?''காவல் காரன் நடுங்கினான்..... ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக? முதல் நாள் இரவு பையன் ''ஜாக்கிரதை. ஜாக்கிரதை '' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை....அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது.அந்த நீதி வாக்யங்கள் இவைதான்.......

#‎ஸ்ரீஆதிசங்கரர்   அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில........

(1)
माता नास्ति पिता नास्ति नास्ति बन्धुः सहोदरः।
अर्थँ नास्ति गृहँ नाति तस्मात् जाग्रत जाग्रत॥

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

There is no mother, no father, no relationships nor any siblings. No money or house. Therefore be alert, Wake up!

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,...

(2)
जन्म दुःखँ जरा दुःखँ जाया दुःखँ पुनः पुनः।
सँसारसागरँ दुःखँ तस्मात् जाग्रत जाग्रत॥

“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

Birth is sorrow, aging is sorrow, spose is sorrow !
Samsara itself is sorrow, therefore remain awake! be alert!

பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம்,மாயம்,
விழித்துக்கொள் ஜாக்ரதை....

(3)
कामक्ष्च क्रोधक्ष्च लोभक्ष्च देहे तिष्ठन्ति तस्कराः।
ज्ञनरत्नापहाराय तस्मात् जाग्रत जाग्रत॥

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

Kama (desires), Krodha (Anger), Lobha (Greed) are like theifs in this body who steal the jewel called "Jnana" [Self Knowledge]. Therefore be alert! Be Awake!

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை...

(4)
आशाया बध्यते जन्तुः कर्मणा बहुचिन्तया।
आयु क्षीणँ न जानाति तस्मात् जाग्रत जाग्रत॥

“ஆசாயா பத்யதே ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”

We are [The animal -humans are also addressed as animals here] bound by Expectations: various activities and excess thinking. so much so that we do not recognize the ebbing away of life. Therefore be awake! Be Awake!

ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா? நாம், மனக்கோட்டை கட்டுபவர்கள்... அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ளவேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.

(5)
सम्पदः स्वप्नसँकाशाः यौवनँ कुसुमोपम्।
विधुच्चन्चचँल आयुषँ तस्मात् जाग्रत जाग्रत॥

All possessions are like what are seen in a dream, youthfulness is only for a short time , like a flower's lifetime. Life passes away like a lightening therefore be alert!

“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல ... நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை,.

(6)
क्षणँ वित्तँ क्षणँ चित्तँ क्षणँ जीवितमावयोः।
यमस्य करूणा नास्ति तस्मात् जाग्रत जाग्रत॥

Money, memory and life are all momentary. Lord Yama, the lord of death, does not show any mercy. Therefore be awake!!

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் . ஜாக்ரதை ஜாக்ரதை

(7)
यावत् कालँ भवेत् कर्म तावत् तिष्ठन्ति जन्तवः।
तस्मिन् क्षीणे विन्श्यन्ति तत्र का परिदेवना॥

As long as their karma lasts so long we see the animal here, the moment the karma is over, the animal is gone. what is there to brood over this ?

சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு.அப்புறம்? வேறென்ன, தொடரும் கதை தான்.இதில் என்ன யோசிக்க இருக்கிறது.மேடையில் ஏறியாயிற்று, வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.....

கர்ம வினைகள் ஓர் அலசல்


உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.

பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? . ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ? இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய "கர்ம வினை" தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம்.இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் . துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.அதேபோல பெரும் பணக்காரர்களையும் 'துக்கங்கள்' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் சர்க்கரை நோயாளியாக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே


துறவு என்பது ஞானமடைதலுக்கான வழி.

இது தோற்றங்களிலிருந்து விடுபட வைக்கிறது.

 இந்த வழியின் சாராம்சம் ஒட்டாதிருப்பது.

அதாவது துறவு.

போதி தர்மன் சொன்னான்.....

புத்தன் சிரிக்காமலேயே சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று.....

யாருமே இதுவரை புத்தன் சிரித்துக் கொண்டிருப்பதான சிலையை பார்த்ததில்லை.

அவரின் இருப்பே சிரிப்புதான்.

சிரிப்பின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் சிரிப்புக்கும் புத்தனின் சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு.

உங்கள் வாழ்வு எந்த நேரத்திலும் ஏதாவது நிகழ்வுகளின் பாதிப்பால் அலைக்கழிக்கப்பட்டு துன்பம் நேரலாம் என்ற மனநிலையில் ஏதாவது ‘அபத்தமாக’ நடந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிரித்துவிடுகிறீர்கள்.

அந்த அபத்தம் உங்களுக்கு தப்பிக்க உதவுகிறது துன்பத்தை மறக்க. டென்ஷன் மறைகிறது.

சிரிப்பு ஆரோக்கியமானது.

நிமிடத்தில் உடலை வேறு நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறது.

ஆனால் அதுவும் நிமிடத்துக்குத்தான்.

பின் மறுபடி உன் இருட்டுக் குகைக்குள் போய்விடுகிறாய்.

உண்மைதான் உன் கனவு எதனால் ஆனதோ.....

அதனால் ஆனதே இந்த வாழ்வும்.

ஆனால் கனவை நீ ஒரு மாயை என்கிறாய்...

நனவை 'மிகுந்த சிரமப்பட்டு' தலையில் வைத்துக் கொண்டாடுகிறாய் .

கனவுக்கும் நீ நினைவு என்று சொல்வதற்கும் வித்தியாசமே இல்லை.

இந்த உலகில் வாழ்.

ஆனால் இந்த உலகம் உன்னுள் இருக்கக் கூடாது.

நினைவிருக்கட்டும்.

இது எல்லாமே அழகான கனவுதான்.

இந்த வாழ்வு என்பது மாறிக்கொண்டும் மறைந்துகொண்டும் தோன்றிக் கொண்டும் இருக்கிறது.

கனவும் அப்படித்தானே.......!!!

அதனால் இந்த நினைவுடன் ஒட்டிக் கொண்டிராதே

எப்படி தூங்கி எழுந்ததும் கனவுடன் ஒட்டிக் கொள்ளாமல் விடுபட்டுவிடுகிறாயோ அப்படி.

ஒட்டிக் கொண்டிருப்பது என்பது விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது.

அப்படி ஒட்டுதல் இல்லாமல் இருக்கையில் ‘அபரிமிதமான ஆற்றல்’ விடுபடுகிறது.

இவைகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளதால் சிறைபட்டுள்ள அந்த ஆற்றல்

ஒரு புதிய உதயத்தை,

புதிய இருப்பை,

புதிய ஒளியை,

புதிய புரிதலை உனக்குள் கொண்டுவரும்.

பிறகு துன்பம் என்பதே இல்லை.

இது நடக்கையில் நீ மிகவும் அமைதியான.....

இதுவரை அனுபவித்திராத அமைதியுடன் இருப்பாய்.

உன் இருப்பிலேயே சிரிப்பு வெடித்துக் கொண்டிருக்கும்.

அதைத்தான் போதிதர்மன் சொன்னான்.

"புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே"

- ஓஷோ.

தியானத்திற்கு தடை மனமே


நீங்கள் கண்களை மூடி தியானம்
செய்ய ஆரம்பபத்தீர்கள் என்றால்
சிறிது நேரத்தில் சோர்வு வரும் , சலிப்பு வரும் ,
உடனே கண்ணை திறக்க வேண்டும் என்கிற ஆர்வம்
வரும் .

உங்களால் சிறுது நேரம் கூட கண்ணை மூடி
உட்கார முடியாது ..

 காரணம் என்ன ,
நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம்
மனம் மரிக்கும் கணம் ஆரம்பமாகி விடுகிறது .

தான் மரிக்காமல் இருக்க அது பல வித்தைகளை ,
பல காரணங்களை எழுப்பி உங்களை தியானம்
செய்ய விடாது ..

 நீங்களும் தியானம் செய்ய முடியவில்லை ,
தியானத்தில் உட்கார்ந்தால் தான் சோர்வு , சலிப்பு ,
வருகிறது என்று நினைத்து எழுந்து விடுவீர்கள் ..

இவையெல்லாம் மனம் தான் மரிக்காமல் இருக்க
செய்யும் அதன் தந்திரம்
இந்த மனதின் தந்திரத்திலேயே பலர் வீழ்ந்து விடுகின்றனர் .

இதிலேயே தான்
பெரும்பாலனோர் தியானம் அமைகிறது.
இந்த நிலையில் நான் தினமும் தியானம் செய்தும்
எனக்கு நிம்மதி , மகிழ்ச்சி இல்லை என்று நினைக்கின்றனர்.

இந்த மனதை தாண்டாமல் நீங்கள் என்ன செய்தாலும் அது
தியானமே ஆகாது .

மனம் செய்யும் வித்தைகளை எல்லாம்
நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டே இருந்தால்
மனம் அடங்கி விடும் ..

 உங்களுக்கு ஒரு நல்ல சேவகனாக
மனம் மாறிவிடும் . ..
 இப்போது மனம் மூலம் செயல்படும்
தியானத்திற்கு பிறகு நீங்கள்
மனதை ஒரு கருவியாக செயல்படுத்துவீர்கள் .

அப்போது உங்களுக்குள் இது நாள் வரை இருந்த துயரம்,
துக்கம், மன அழுத்தம் , போர் தன்மை , சலிப்பு
எல்லாம் ஆவியாக மறைந்து விடும்.
கொண்டாட்டம்,ஆனந்தம் என்கிற வார்த்தையின்
உண்மையான பொருள் அப்போது புரிய வரும் .

நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் நீங்கள்
எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ,
உங்களுக்கு வாழ்வே மகிழ்ச்சிகரமாக , ஆனந்தகரமாக
கொண்டாட்டமாக இருக்கும் ..

ஆசையே இன்பங்களுக்கு காரணம்


பிரம்ம தத்துவத்தில் இருக்கும் ஆன்மா.. எப்பொழுது இந்த பூமியில் மனித உடலெடுத்து நடிக்கவேண்டும் என்பதை உணர்கின்றதோ.. அப்பொழுதே பூமியை நோக்கி பிரம்மதத்துவம் விட்டு புறப்பட ஆரம்பித்து விடுகின்றது..

ஆசை இன்று பூமியில் நீங்கள் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் ஆசையினால்தான் உருவாக்கப் பட்டது.. ஆசை இல்லையென்றால் நான்.. நீங்கள்..ஏன்..இந்த உலகமே இல்லை..

புத்தர் கூட ஆசையினால் தான் ஞானத்தை தேட ஆரம்பித்தார்.. அது அவருடைய ஆசை.. மனிதனாக பிறந்தவனுக்கு ஆசை இல்லை என்றால் அவன் இந்த பூமிக்கு வந்ததில் அர்த்தமே இல்லை..

கடவுள் கூட பூமிக்கு வருவது...குழந்தைகளின் ஆசையை பூர்த்தி செய்யும் ஆசையில் தான் பூமிக்கு வருகின்றார் அதாவது அதர்மத்தை அழித்து சத்திய தர்மத்தை ஸ்தாபனை செய்ய..தன்னுடைய குழந்தைகளை சந்திக்க.. பக்தர்களை சந்திக்க இப்படி ஒரு ஆசை..

ஏனென்றால் பகவானின் மீது நாம் வைத்த ஆசை அவரை இந்த உலகிற்கு அவரை ஆசைப்பட்டு அழைத்து வந்துவிட்டது.. சரி.. இதுவரை..சொன்னது அனைத்துமே நல்ல ஆசைகள்..நன்றாக படிக்க வேண்டும்.. தாய்..தந்தையருக்கு பிடித்த மாதிரி நடக்க வேண்டும்..

உயர்ந்த பதவி அடைய வேண்டும்.. அனைவரது நல் விருப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும்.. கடவுளை பின்பற்றி நடக்கவேண்டும் இவை அனைத்தும் நல்ல ஆசைகள்..

இதன் பிறகு தீய ஆசைகள்..மனித வரம்பில் எதெல்லாம் செய்ய கூடாதோ..அதை தான் தீய ஆசை என்று சொல்லப்படுகின்றது.. இந்த தீய ஆசைகளின் இன்னொரு பெயர்தான் "இச்சை"-இந்த இச்சைதான் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.இந்த இச்சைக்குள் தான் காமம்,கோபம்,பேராசை, பற்று, அகங்காரம்..இப்படி தீய குணங்கள் டென்ட் அடித்து தங்கியிருக்கின்றன..

இந்த இச்சையை வென்றவர்தான்.. மாயையை வென்றவர்.. முதலில் இச்சை கண்களின் வழியாக மனதிற்கு சென்று அதை எண்ணமாக உருவாக்குகின்றது.. அந்த எண்ணத்தை புத்தி ஏற்றுக்கொண்டு.. அது அந்த செயலை செய்யும் சமஸ்காரத்தை உருவாக்குகின்றது.. பிறகு அது செயலாக மாறி பாவத்தின் கணக்கை உருவாக்குகின்றது..இந்த பாவ கணக்கை செய்யும் முன்..ஏற்கனவே செய்த நன்மைகள் மனதில் இருந்து எச்சரிக்கின்றன..

இது வேண்டாம்..இதனால் தீமை என்பதை அறிவுறுத்துகின்றன..இதைதான் மனிதர்கள் மனசாட்சி என்று சொல்கின்றனர்..உடலில் உள்ள வெள்ளை அனுக்கள்.. சிவப்பனுக்கள் போல..ஒரு பாவ செயலை செய்யும் பொழுது எச்சரிக்கும் உள் மனம்.. பாவத்தின் வசமாகும் பொழுது நல்லவைகள் அங்கே இருந்து காலி பண்ண ஆரம்பிக்கின்றன.. ஏனென்றால் இனி இங்கே குடியிருக்க முடியாது என்பது தெரிந்து விடுகின்றது..

தீயவை வரும்பொழுது எச்சரிக்கும் உள் மனம் என்ற மனசாட்சி..அதன் பிறகு அமைதி ஆகிவிடுவதன் காரணம் இதுதான்..அது அந்த இடத்தை காலி செய்து விட்டது.. இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் எச்சரிக்கும் உள்மனம் அதன் பிறகு எச்சரிக்கை செய்யாவிட்டால் புரிந்து கொள்ளுங்கள்.. அது அங்கே காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டது பிறகு, ஆத்திரப்பட்டு...அடிபட்டு..இதெல்லாம் நல்லதல்ல என புரிந்து மீண்டும் நல்லவற்றை குடி அமர்த்த எவ்வளவு நாட்களாகும் என்று நினைத்து பாருங்கள்..

இதற்க்கெல்லாம் மூல காரணம் இச்சை என்று சொல்கின்றோமே அந்த தீய ஆசைகள்தான் காரணம்..இது எங்கே இருந்து புறப்பட்டது.. கண்..எனவே இறைவன் சிவபெருமானும்,இந்த கண்களை குற்றம் அற்றதாக மாற்றிவிடுங்கள் என்று சொல்கின்றார்.கண்களை குற்றம் அற்றதாக மாற்ற உங்களுடைய ஆன்மா என்ற கண்ணை விழிப்புடன் வையுங்கள்.. ஏனென்றால்.. உலகில் கூட சொல்வார்கள் ஏதாவது சண்டை வந்து விட்டால்..

அவரது முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை இங்கிருந்து போக சொல்லுங்கள் என்று..தேகத்தை பார்ப்பதால் தான் அனைத்து குற்றங்களும் விளைகின்றன எனவே, தன்னை ஒரு ஆன்மாவாக புரிந்து மற்றவர்களையும் ஆன்மா என்ற ரீதியில் நெற்றியின் நடுவே மின்னும் சின்னஞ்சிறிய நட்சத்திரம் என்று புரிந்துகொள்ளவேண்டும்..

இதனால் குற்றப்பார்வை அழிந்து கண்கள் குற்றமற்றதாகிவிடும்..சிவபெருமான் பிரம்மாவின் உடலில் பிரவேசித்து அவரது நெற்றியின் மூலம் நம்முடைய நெற்றியில் ஆன்மா என்ற கண்ணை திறந்துள்ளார்.இதை எப்பொழுதும் விழிப்புடன் வைத்திருப்பவர்க்கு எல்லாமே சுபம்..

வாழ்த்துக்கள்..

இருப்பு நிலை - ஓஷோ


உண்மையை அறிய எல்லாப் பொய்மைகளையும் மாயைகளையும் நீங்கள் விட்டு விட வேண்டும்.

அந்தப் பொய்மைகளில் மிகப் பெரியது " நான் " என்ற அகங்காரம்தான்.

கடவுளை நம்புவதற்கு அவரை அறிய வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் கடவுளை அறிந்த பிறகு நம்புவதற்கு ஒன்றும் இல்லை.

உங்களுடைய நான் என்ற மறைவே கடவுளின் உதயமாகும்.

கடவுள் என்பது.....
வாழ்வு,
அன்பு,
ஒளி,
பேரியக்க பிரபஞ்ச அனுபவம்,
உங்களது உள் உணர்வு,
உங்கள் உள்ளே மலரும் நறுமணம்

கடவுள் என்ற மலரை நீங்கள் பார்க்க முடியாது

அதன் நறுமணத்தை நீங்கள் நுகரலாம்.

எல்லாமே தெய்வீகம்தான்

இந்த.......
மலர்கள்,
பறவைகள்,
பாறைகள்,
ஆறுகள்,
மரங்கள்,
இவைகள் யாவும்
கடவுட் தன்மையுடன் மிளிர்கின்றன.

நீங்கள் உண்மையை அறிந்து கொள்ளுவதை நம்பிக்கை தடுக்கிறது.

பொய்யான நம்பிக்கைகளால் மக்கள் பிளவு பட்டு நிற்கிறார்கள்.

நீங்கள் யார் என்றே உங்களுக்குத் தெரியாத போது

கடவுள் யார் என்று எப்படி உங்களுக்குத் தெரிய போகிறது.......???

கடவுள் உங்களுக்கு மிக அருகில் இதயத்தின் வழியாகவும் மூச்சின் வழியாகவும் தன்னை உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் உங்கள் பயத்தில் இருந்து உருவானவைகள் தான்

அவைகள் உங்கள்......
அன்பிலிருந்தோ,
உண்மையை அறிந்ததிலிருந்தோ,
சொந்த அனுபவத்தில் இருந்தோ,
உண்டானதில்லை

- ஓஷோ.