வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Saturday 6 May 2017

ஆசையே இன்பங்களுக்கு காரணம்


பிரம்ம தத்துவத்தில் இருக்கும் ஆன்மா.. எப்பொழுது இந்த பூமியில் மனித உடலெடுத்து நடிக்கவேண்டும் என்பதை உணர்கின்றதோ.. அப்பொழுதே பூமியை நோக்கி பிரம்மதத்துவம் விட்டு புறப்பட ஆரம்பித்து விடுகின்றது..

ஆசை இன்று பூமியில் நீங்கள் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் ஆசையினால்தான் உருவாக்கப் பட்டது.. ஆசை இல்லையென்றால் நான்.. நீங்கள்..ஏன்..இந்த உலகமே இல்லை..

புத்தர் கூட ஆசையினால் தான் ஞானத்தை தேட ஆரம்பித்தார்.. அது அவருடைய ஆசை.. மனிதனாக பிறந்தவனுக்கு ஆசை இல்லை என்றால் அவன் இந்த பூமிக்கு வந்ததில் அர்த்தமே இல்லை..

கடவுள் கூட பூமிக்கு வருவது...குழந்தைகளின் ஆசையை பூர்த்தி செய்யும் ஆசையில் தான் பூமிக்கு வருகின்றார் அதாவது அதர்மத்தை அழித்து சத்திய தர்மத்தை ஸ்தாபனை செய்ய..தன்னுடைய குழந்தைகளை சந்திக்க.. பக்தர்களை சந்திக்க இப்படி ஒரு ஆசை..

ஏனென்றால் பகவானின் மீது நாம் வைத்த ஆசை அவரை இந்த உலகிற்கு அவரை ஆசைப்பட்டு அழைத்து வந்துவிட்டது.. சரி.. இதுவரை..சொன்னது அனைத்துமே நல்ல ஆசைகள்..நன்றாக படிக்க வேண்டும்.. தாய்..தந்தையருக்கு பிடித்த மாதிரி நடக்க வேண்டும்..

உயர்ந்த பதவி அடைய வேண்டும்.. அனைவரது நல் விருப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும்.. கடவுளை பின்பற்றி நடக்கவேண்டும் இவை அனைத்தும் நல்ல ஆசைகள்..

இதன் பிறகு தீய ஆசைகள்..மனித வரம்பில் எதெல்லாம் செய்ய கூடாதோ..அதை தான் தீய ஆசை என்று சொல்லப்படுகின்றது.. இந்த தீய ஆசைகளின் இன்னொரு பெயர்தான் "இச்சை"-இந்த இச்சைதான் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.இந்த இச்சைக்குள் தான் காமம்,கோபம்,பேராசை, பற்று, அகங்காரம்..இப்படி தீய குணங்கள் டென்ட் அடித்து தங்கியிருக்கின்றன..

இந்த இச்சையை வென்றவர்தான்.. மாயையை வென்றவர்.. முதலில் இச்சை கண்களின் வழியாக மனதிற்கு சென்று அதை எண்ணமாக உருவாக்குகின்றது.. அந்த எண்ணத்தை புத்தி ஏற்றுக்கொண்டு.. அது அந்த செயலை செய்யும் சமஸ்காரத்தை உருவாக்குகின்றது.. பிறகு அது செயலாக மாறி பாவத்தின் கணக்கை உருவாக்குகின்றது..இந்த பாவ கணக்கை செய்யும் முன்..ஏற்கனவே செய்த நன்மைகள் மனதில் இருந்து எச்சரிக்கின்றன..

இது வேண்டாம்..இதனால் தீமை என்பதை அறிவுறுத்துகின்றன..இதைதான் மனிதர்கள் மனசாட்சி என்று சொல்கின்றனர்..உடலில் உள்ள வெள்ளை அனுக்கள்.. சிவப்பனுக்கள் போல..ஒரு பாவ செயலை செய்யும் பொழுது எச்சரிக்கும் உள் மனம்.. பாவத்தின் வசமாகும் பொழுது நல்லவைகள் அங்கே இருந்து காலி பண்ண ஆரம்பிக்கின்றன.. ஏனென்றால் இனி இங்கே குடியிருக்க முடியாது என்பது தெரிந்து விடுகின்றது..

தீயவை வரும்பொழுது எச்சரிக்கும் உள் மனம் என்ற மனசாட்சி..அதன் பிறகு அமைதி ஆகிவிடுவதன் காரணம் இதுதான்..அது அந்த இடத்தை காலி செய்து விட்டது.. இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் எச்சரிக்கும் உள்மனம் அதன் பிறகு எச்சரிக்கை செய்யாவிட்டால் புரிந்து கொள்ளுங்கள்.. அது அங்கே காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டது பிறகு, ஆத்திரப்பட்டு...அடிபட்டு..இதெல்லாம் நல்லதல்ல என புரிந்து மீண்டும் நல்லவற்றை குடி அமர்த்த எவ்வளவு நாட்களாகும் என்று நினைத்து பாருங்கள்..

இதற்க்கெல்லாம் மூல காரணம் இச்சை என்று சொல்கின்றோமே அந்த தீய ஆசைகள்தான் காரணம்..இது எங்கே இருந்து புறப்பட்டது.. கண்..எனவே இறைவன் சிவபெருமானும்,இந்த கண்களை குற்றம் அற்றதாக மாற்றிவிடுங்கள் என்று சொல்கின்றார்.கண்களை குற்றம் அற்றதாக மாற்ற உங்களுடைய ஆன்மா என்ற கண்ணை விழிப்புடன் வையுங்கள்.. ஏனென்றால்.. உலகில் கூட சொல்வார்கள் ஏதாவது சண்டை வந்து விட்டால்..

அவரது முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை இங்கிருந்து போக சொல்லுங்கள் என்று..தேகத்தை பார்ப்பதால் தான் அனைத்து குற்றங்களும் விளைகின்றன எனவே, தன்னை ஒரு ஆன்மாவாக புரிந்து மற்றவர்களையும் ஆன்மா என்ற ரீதியில் நெற்றியின் நடுவே மின்னும் சின்னஞ்சிறிய நட்சத்திரம் என்று புரிந்துகொள்ளவேண்டும்..

இதனால் குற்றப்பார்வை அழிந்து கண்கள் குற்றமற்றதாகிவிடும்..சிவபெருமான் பிரம்மாவின் உடலில் பிரவேசித்து அவரது நெற்றியின் மூலம் நம்முடைய நெற்றியில் ஆன்மா என்ற கண்ணை திறந்துள்ளார்.இதை எப்பொழுதும் விழிப்புடன் வைத்திருப்பவர்க்கு எல்லாமே சுபம்..

வாழ்த்துக்கள்..

0 Comments:

Post a Comment