வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Saturday 6 May 2017

ஓஷோவின் துறவு விதிகள்


1.  விழிப்புணர்வு நுட்பான உணர்தலைக் கொண்டு வருகிறது, ஆகவே அது துவக்கத்தில் அதிக வலியையும், இறுதியில் பரவசத்தையும் கொடுக்கிறது.

2. சோம்பேறித்தனம் சக்தியற்ற நிலை, செயல் குறிக்கோள் உடையது. வெறும் சக்தியாக இருந்து கொண்டிருப்பது முயற்சியற்ற செயலைக் கொண்டுவருகிறது.

3. பதட்டம் தப்பிக்கும் ஆசையை கொடுக்கிறது, இதுதான் மூழ்கடிக்கிறது, பின் இதிலிருந்து ஈகோ பிறக்கிறது.

4. தன்ணுணர்வின் நிழலாகவே உன் தனிப்பட்ட உலகம் இருக்கிறது. இதைக் கண்டுகொள், துறக்க வேண்டிய அவசியமில்லை.

5. உள்முகமாகத் திரும்புவது தப்பித்தல் அல்ல. அது அமைதியாக வாழ்வது.

6. உள்ளே – வெளியே என்றும், ஆன்மா – பொருள் என்றும் இல்லை.

7. வாழ்வு பிரிக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது.

8. அன்பு அடுத்தவருக்கு சுதந்திரம் தரும். அன்பு பொறுப்பைக் கொடுக்கும்.

9. தன்ணுணர்வோடு வாழ்வை அனுபவிப்பதே ஓஷோவின் ஒழுக்கம்.

10. குடும்பம், நண்பர்கள், மகன், மகள் போன்ற எல்லாமே வெறும் வசதிகளே, பழக்கங்களே, ஊட்டப்பட்ட நம்பிக்கைகளே.


- ஓஷோ.

0 Comments:

Post a Comment