வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Monday 6 June 2016

தமிழ்தந்த அகத்தியர்



திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் அகத்தியம் என்னும் பிரிவில் திருமூலர் விளக்குகிறார்.


நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து

கெடுகின்ற தெம்பெருமான் என்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னி ரென்றானே.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

- திருமந்திரம்.-

இவ்வுலக மக்கள் ஆன்ம யோக வழிகளை மறந்து கெடுகிறர்கள். அகத்தியா நீ போய் அவர்களை தெளிவுபடுத்தி நல்வழி காட்டு என்று ஈசன் அகத்தியருக்குச் சொல்கிறார்.


ஈசனின் ஆணைக்கு கட்டுப்பட்ட அகத்தியர் தெற்கு நோக்கி வந்து தமிழ்ச்சங்கதில் அமர்ந்து அகத்தியம் என்னும் ஐந்திலக்கண நூலை எழுதினார். இதுவே தமிழின் முதல் இலக்கண நூல்.


இதனால் அகத்தியர், தமிழ்தந்த அகத்தியர் என்றும் அழைக்கப்பட்டார்.

0 Comments:

Post a Comment